Wednesday 7 August 2013

அஞ்சலி வருகையால் டாப்சி கலக்கம்

சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், கோடம்பாக்கமே வேண்டாமென்று, ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலியை, மீண்டும் தமிழுக்கு வருமாறு சில இயக்குனர்கள் அழைத்தபோது, இப்போதைக்கு வருவதாக இல்லை என்று மறுத்து வந்தார்.
ஆனால், “முனி படத்தின், 3ம் பாகமான, “கங்கா படத்தின் தெலுங்கு பதிப்புக்காக, முதலில் அஞ்சலியை புக் பண்ணியிருந்த ராகவா லாரன்ஸ், இப்போது தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளிலுமே, அஞ்சலியை புக் செய்து விட்டார். இப்படத்தின் இரண்டாவது பகுதியில், அஞ்சலி நடிக்கும் கேரக்டர், மிக அதிரடியாக இடம் பெறுகிறது.
லாரன்ஸ் படத்தின் மூலம், மீண்டும், அஞ்சலி தமிழுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஆனால், இதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக, ஏற்கனவே, கமிட்டாகியுள்ள டாப்சியோ, அஞ்சலி படத்தில் இணைக்கப்பட்டிருப்பதால், தன்னை டம்மியாக்கி விடுவார்களோ என்று குழம்பிப்போய்இருக்கிறார்.