Thursday 21 May 2015

chutti aishwarya - kanchana 2 junior

Blind student 10th state level 2nd rank

பார்வையற்ற மாணவி சாதனை!!!



பார்வையற்ற மாணவி சாதனை!!!
10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த என் சகோதரி மகள் மணிமேகலை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில்  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பள்ளியைச் சேர்ந்த மணிமேகலை 474 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். திருத்தங்கல்லில் வசிக்கும் எனது சகோதரி மகாலட்சுமியின் மகள் மணிமேகலை. இவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-97, ஆங்கிலம்-90, கணிதம்-92, அறிவியல்-98, சமூகஅறிவியல்-97. தனது வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் மணிமேகலை, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் சாதனைகள் படைத்து வாழ்வில் உயர்நிலை அடைய மனமார பாராட்டி வாழ்த்துகிறோம். இவர் மேலும் பல சாதனைகளை படைக்க அனைவரும் வாழ்த்துங்கள். வாழ்த்துகளுக்கும், உதவி செய்வதற்கும் தொடர்பு கொள்ள: 8682071116.

வாழ்த்தும் நெஞ்சங்கள்: அ. மாரீஸ்வரன், மா.சுசிலா, மா.சு.யோகேஷ், மா.சு.ஐஸ்வர்யா.