Tuesday 16 June 2015

சித்தர் ஜீவசமாதி திருப்பணியில் பங்கேற்க வாருங்கள்…




  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, வழிகாட்டிகளாக, குருவாக, மக்களோடு மக்களாக வாழ்ந்து, உருவமாகவும், அரூபமாகவும் இருந்து உலக உயிர்களை காத்து வருபவர்கள் சித்தர்கள். அட்டமா சித்திகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற நற்பயன்களை வழங்கி, இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களுள் ஒருவரான மாங்காட்டில் ஜீவசமாதியான சர்ப சித்தர், நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி, கேட்டவரம் தந்து அருளி வருகிறார்.

  சர்ப தோஷம், பித்ரு தோஷம், திருமணத்தடை, உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தீர சர்ப சித்தரை வழிபட்டு வர பிரச்சனைகள் அகலும். இது அங்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறும் உண்மை. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சர்ப சித்தரின் ஜூவ சமாதியான “சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்” சென்னை மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.


























   சர்ப சித்தர் குடி கொண்டுள்ள அதிஷ்டானம் எனப்படும் கோவிலின் மீது மூன்று நிலை கோபுரம், தியான மண்டபம், சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாதி வேலைக்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியால் ஆலய திருப்பணிகளைத் தொடருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  அருளுள்ளம் படைத்த அடியார்கள், சிவ பக்தர்கள், சித்தரடியார்கள் உதவியுடன் இதுவரை இந்தப் பணி சாத்தியமாயிற்று. தொடர்ந்து கட்டுமானப் பணிகளை நிறைவு செய்திட பொருளாகவோ, நிதியாகவோ உதவி செய்திட கேட்டுக் கொள்கிறோம்.





  கோவில் திருப்பணியில் பங்கு பெற்று ஐயா சர்ப சித்தரின் அருள் பெற அழைக்கின்றோம். 

    இப்படிக்கு, சித்தர் அடிகளார் சிவஸ்ரீ ஜி.டி. ரவிச்சந்திரன்.

ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்,  கோவிந்தராஜ் நகர், மாங்காடு, சென்னை. தொலைபேசி எண். 9789826263 .