Saturday 23 August 2014

முகத்தைப் பராமரிக்க:

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.
பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம்பளிச் பளிச்போங்க..!

Tuesday 19 August 2014

இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா!!!

இறோம் சானு சர்மிளா அல்லது இரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர்மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபிஎன அழைக்கின்றனர். இவர் நவம்பர் 2, 2000ஆம் நாளிலிருந்து மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.
 உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு
        நவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.  இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது  1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.
நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார். அவரது உடன்பிறப்பு இறோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும்.  சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
        உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்.  அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக,மூக்கு குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.

Monday 11 August 2014

ஐந்து (5) காசுக்காக 41 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கு!-

          இதுக்கு முடிவே இல்லையா? இந்த விநோதம் இந்தியாவில்தான்! தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் “5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5கோடி தடவை 5 காசு திருடி னா தப்பா? என்ற வசனம் டெல்லி போக்கு வரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரி யாக பொருந்தும்.
        1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச் சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர் மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது. பல்வேறு கட்டணங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பிடியாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவறு செய்பவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் டெல்லி போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
       1973 -டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணி புரியும் ரன்வீர் சிங், பறக்கும் படை சோதனையில் சிக்கினார். அப்போது ஒரு பெண் பயணிக்கு 15 காசுகள் பயணச்சீட்டுக்கு பதிலாக 10 காசுகள் பயணச்சீட்டை அவர் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தவறை ரன்வீர் சிங் ஒப்புக் கொண்டார்.
ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசு கள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். 1976 – ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்ட தால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
1976 – போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர்  நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார்.

       1990 – ரன்வீருக்கு சாதகமாக நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தர விட்டது.
      1990 – இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதள வு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழ கம் கூறியது.
2008 – உயர்நீதிமன்றமும் ரன் வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
           2008 – தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டு ம் என்று ரன்வீர் சிங் கோரினார்.

     2014 – ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங் கும் தொடர்ந்து போராடி வருகிறார்.