Wednesday 28 August 2013

பூர்ண கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்




மஹா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு ஆவணி 12ம் நாள்(28.8.2013) புதன் கிழமை அன்று கிருஷ்ண ஜயந்தி பூர்ணமாக வருகிறது. ஃ யாதெனில் அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் என அனைத்து அம்ஸங்களுடன்  சேர்ந்து வருவது மிகவும் சரியான ஸ்ரீஜயந்தி நாளாகும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக ஏற்படும். இதுவே கிருஷ்ணர் பிறப்பின் காலசூழலுடன் ஒத்துப்போகும் நிலையாகும்.  இந்நாள் பூர்ண கிருஷ்ண ஸ்ரீஜயந்தி , கோகுலாஷ்டமி, வைகானஸ ஜயந்தி என அழைக்கப்படும்
கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறுவிதங்களில் குடிகொண்டிருப்பவன்.மீராவுக்கோ காதலன், ராதாவுக்கும்அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி.
நாம் என்னவாக இருக்கிறோமோ அதன்படியே நமக்கு காட்சி தருபவர்தான்கிருஷ்ணர்.  பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒருதரிசனம் கொடுக்கிறார்.  ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார்.ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர்.  அவருக்கு போர் வீரராகவேகாட்சியளிக்கிறார்.
விஷ்ணு
 சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்சநந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரன்தரிசனத்தைக் குறிப்பதாகும்.
இந்துக்
 கடவுளர்களில் பக்தர்கள் மனதில் தனது தீராத விளையாட்டுத்தனத்தினால்  அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர்
 பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே
 இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும். 
    
        இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டு

கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள்

அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
 
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்

செய்முறை

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment