Saturday 12 October 2013

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

 ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால்,  ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் : 

1.
பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து, திருமணம் செய்யாமல் இருத்தல்.

2.
பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது.

3.
குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது.

4.
குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது.

5.
வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது.

6 .
சென்ற பிறவிகளில், ஆலயத்தை இடித்தல், சாமி சிலையை திருடுதல். 


7.
உங்கள் மீது தனக்கு இருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும், அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.
வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்.

2.
தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்.

3.
மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்.

4.
தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்.

5.
திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது.

6.
குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம். 

பரிகாரம்: தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்துஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.

No comments:

Post a Comment