Tuesday 16 July 2013

இது விடைபெறும் நேரம்…!

எத்தனை கனவுகள்!
எத்தனை கற்பனைகள்!

எல்லாம் நிறைவேற
உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!

நம்பிக்கை சிறகுகள்
இருக்கும் வரை
திசைகளின் மேலேறி
ஆகாயம் பறிக்கும்
அதிசயம் நிகழ்த்தலாம்.

நமக்கான பணிகளும்
நமக்கான கடமைகளும்
நமக்கான போர்களும்
நமக்காகவே காத்துக் கிடக்கின்றன.

அன்பால்
வசியம் செய்து
அகிலத்தை
வசமாக்கலாம்.

பௌர்ணமி சிந்தும்
வசந்த காலங்களாய்
உங்கள் வாழ்வு
என்றென்றும் சிறக்க
வாழ்த்துக்கள்.




ஓவியம் : மாரீஸ்