Wednesday, 25 September 2013

விசுவல் கம்யூனிகேஷன் துறையில் வேலை வாய்ப்பு தரும் படிப்புகள்...


      பிரிண்ட் மீடியா(செய்தித்தாள், பத்திரிக்கை), விசுவல் மீடியா(டி.வி) ஊடகத்துறை உள்ளிட்ட இந்தத்துறை மிகவும் இன்றியமையாத துறையாகும். சமூக அவலங்களையும் அரசு அதிகாரிகளின் நேர்மையின்மையையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் மிகச் சிறந்த வேலையை இந்தத் துறையில் மட்டுமே செய்ய முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, எடுக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும். ஆசிரியத் தொழிலும் பத்திரி்க்கைத் தொழிலும் மட்டுமே சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த பணியாகும்

மனிதன் நாகரீகம் அடைய தொடங்கிய காலத்திலிருந்தே, படம் மற்றும் உருவங்களை வைத்து, தகவல் பரிமாற்றம் செய்வதென்பது, ஒரு பழமையான செயலாகவே இருந்துள்ளது. அந்த செயல்பாட்டின் பரிணாமம்தான் விசுவல் கம்யூனிகேஷன் என்ற படிப்பாக இன்று உள்ளது. ஆர்ட்ஸ், குறியீடுகள், போட்டோகிராபி, டைப்போகிராபி, வரைதல் அடிப்படைகள், வண்ணம் மற்றும் எலக்ட்ரானிக் மூலங்கள் போன்றவை முக்கியமானவை.

இந்த விசுவல் கம்யூனிகேஷன் துறையில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய ஆய்வானது, வெப் டிசைன் மற்றும் Graphically-oriented usability ஆகியவை தொடர்பானது. Designers மற்றும் Creative professionals குறைவான இருக்கும் ஒரு நாட்டில், அத்தகைய மனிதவளத்தைப் பெருக்க, விசுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு ஒரு முக்கியமான அம்சம்.
சேர்க்கை மற்றும் தன்மை
ஒருவர் தனது பள்ளிப் படிப்பை எந்தப் பிரிவில் முடித்திருந்தாலும், தனது இளநிலைப் பட்டப் படிப்பில் இந்த விசுவல் கம்யூனிகேஷன் பிரிவை தேர்வு செய்யலாம். பல கல்லூரிகள் இந்தப் படிப்பில் மாணவர்களை சேர்க்க, தங்களுக்கென சொந்த நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு செயல்முறைகளைக் கொண்டுள்ளன. இந்தப் படிப்பானது, மனித தகவல்தொடர்பு, மேம்பாட்டு தகவல்தொடர்பு, மீடியா கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பற்றிய தியரி புரிந்துணர்வையும், விளம்பரம், போட்டோகிராபி, டெலிவிஷன் ப்ரொடக்ஷன், பிலிம் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவைப் பற்றி அடிப்படை பிராக்டிகல் அறிவையும் வழங்குகின்றன.
சென்னையிலுள்ள லயோலா கல்லூரியானது, கடந்த 1989ம் ஆண்டே இந்தப் படிப்பைத் துவங்கிவிட்டது. அந்த காலகட்டங்களில்தான் இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்கள் அந்தப் படிப்பைத் துவங்கின. தற்போதைய நிலையில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 30 கல்லூரிகள் இந்த விஸ்காம்(VISCOM) படிப்பை வழங்குகின்றன.



வேலை வாய்ப்பு
மீடியா மற்றும் விளம்பரத் தொழில்துறையில், Art directors, Copy writers மற்றும் Account executives ஆகிய பணி வாய்ப்புகளையும், தொலைக்காட்சித் துறையில், Programme executive, Camera man மற்றும் Editor பணி வாய்ப்புகளையும், சினிமாத் துறையில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும், ஆர்ட் டைரக்டர்களாகவும், ஐடி துறையில் Web designer, Computer graphics artists, Animation personnel மற்றும் Interface designers ஆகிய பணி வாய்ப்புகளையும், போட்டோகிராபி துறையில், Photo journalists, Advertising photographers, Fashion photographer, Industrial photographer மற்றும் Wildlife photographer ஆகிய பணி வாய்ப்புகளையும், மாணவர்களுக்கு இந்தப் படிப்பு வழங்குகிறது.

இத்துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்தமான பிரிவில் specialise செய்யலாம். (உதாரணம்: ஒருவருக்கு எழுத்தில் ஆர்வமிருந்தால், பத்திரிக்கை துறையில் செல்லலாம்.) இதுபோன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பரந்தளவிலான வாய்ப்புகளைக் கொண்ட விஸ்காம் படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் தயங்க வேண்டாம்.


சுக்கிர திசை பலன்கள்

        சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுபக் கிரகமாக இருந்தாலும்,எல்லோருக்கும் யோகங்களை அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. ரிஷபம்,துலாத்தில் ஆட்சி பெறும் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுகிறார். ஆனால், கன்னியில் நீச்சம் பெற்றுக் காணப்படுகிறார். ஒருவருடைய வாழ்க்கையில் சுக்ர தசை வந்தால், அது 20 வருடங்கள் நடைபெறும். ஆனால், எல்லோருக்கும் சுக்ர தசை யோகமாகத்தான் இருக்கும் என்று கூற முடியாது. உதாரணமாக தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பாவியாகிறார். இந்த லக்கினக்காரர்களுக்கு நல்ல பலன்களோ யோகமான அமைப்போ உண்டாவதில்லை. ஆனால் கன்னி லக்கினத்திற்கு தனபாக்கியாதிபதியான சுக்கிரன் யோகங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். மிதுனம், கும்பம், மகரம் இவர்களுக்கெல்லாம், நல்ல பலன்களைக் கொடுத்து அபரிமிதமான ராஜயோகத்தைக் கொடுக்கிறார். சுக்கிரன் உச்சம் பெற்று சுக்கிர தசை நடைபெறும் ஒருவருக்கு சொகுசு வாழ்க்கை அமைந்து.
         செல்வமும், செல்வாக்கும் கூடும். ஒரு கிரகம் உச்சமாகி அந்தக் கிரத்தோடு, சுக்கிர தசை நடைபெறுகிற போது, தொழில் ஏற்றம் அடையும். சுக்கிரன் நீச்சமாகி அதனுடைய திசை நடைபெறுகின்றபோது, பெண்களால் கெடுதி, தொழிலில் போராட்டம், சில ரகசிய நோய்கள் உண்டாகும். நீச்சம் பெற்ற கிரகத்தோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன் பழிச் சொல்லுக்கும், இழி சொல்லுக்கும் ஆளாகக்கூடிய நிலைகள், சொல்ல முடியாத துன்பங்கள் அபவிக்கின்ற யோகம் யாவும் உண்டாகும். நட்பு பெற்ற சுக்கிர தசை உண்டாகிறபோது நல்ல பலன்களாக நிகழும். அபரிமிதமான ராஜ யோகம், சொந்த வீடு, வாகனம்,வெளிநாடு செல்லக்கூடிய யோகம் யாவும் உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில் திரிகோணம் என்று சொல்லக்கூடிய 1,5,9 ஆகிய இடங்களில், சுக்கிரன் வீற்றிருந்து சுக்கிர தசை நடைபெறுகின்றபோது, பிரமாதமான ராஜயோகம் உண்டாகிறது. புகழ், வீடு வாங்கும் யோகம்,வாகனப் பிராப்தி அனைத்தும் உண்டாகும். தசை நடைபெறுகின்றபோது, அழகான மனைவி, அற்புதமான புத்திர பாக்கியம், சொகுசு வாழ்வு அத்தனையும் உண்டாகும்
        ஒருவருடைய ஜாதகத்தில், சுக்கிரன் 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால், அவருடைய திசை நடைபெறும்போது வாகன யோகம் ஆபரணச் சேர்க்கை செல்வம், செல்வாக்கு, வாகனம், வீடு அனைத்தும் அமையும். மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக, ஒருவருடைய ஜாதகத்தில், சுக்கிரன் பகை பெற்ற திசை நடைபெற்றால், நெருங்கிய உறவினர்களோடு விரோதம், மனைவியுடன் கருத்து வேறுபாடு, பொருளாதர வீழ்ச்சி, குடும்பத்தில் குழப்பம் ஆகியவை ஏற்படும். சுக்கிரன் பாவர்களால் பார்க்கப் பெற்று தசை நடை பெற்றால், கெடுபலன்கள் தொடரும். குடும்பத்தில் குழப்பம், பொருள் இழப்பு, ஊரையும் நாட்டையும் பிரியும் நிலை முதலியவை ஏற்படும். சுக்கிர தசை நடைபெறும் காலங்களில் வெள்ளிக்கிழமைதோறும், அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வதும் பெருமாள் வழிபாடும் நற்பலனை உண்டாக்கும்.

சுக்கிரன் அம்சங்கள்
கிழமை    : வெள்ளி
தேதிகள்    : 6, 15, 24
நட்சத்திரம்    : பரணி, பூரம், பூராடம்
ராசிகள்    : ரிஷபம், துலாம்
உச்சம்    : மீனம்
நீச்சம்    : கன்னி
ரத்தினம்    : வைரம்
உலோகம்    : வெள்ளி
தானியம்    : மொச்சை
நிறம்    : வெண்மை
ஆடை    : வெண்பட்டு
திசா காலம்    : 20 ஆண்டுகள்.