Sunday, 11 January 2015

அம்மன் கோயில்கள் :-


அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், பெருங்களத்தூர், சென்னை
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை
அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை
அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம், சென்னை
அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை
அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில், வண்ணாந்துறை, சென்னை
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர்
அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், பெருமாநல்லூர், கோயம்புத்தூர்
அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்
அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர்
அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி, திண்டுக்கல்
அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில், தெத்துப்பட்டி, திண்டுக்கல்
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம், திண்டுக்கல்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர், ஈரோடு
அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு
அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில், தாசப்பக்கவுடர்புதூர், ஈரோடு
அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு
அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில், ஈரோடு
அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம், ஈரோடு
அருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம், ஈரோடு
அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு, ஈரோடு
அருள்மிகு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி திருக்கோயில், புதுப்பட்டினம், காஞ்சிபுரம்
அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு காமாட்சி திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம்
அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில், பஸாரா, ஆதிலாபாத்
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், கரூர்
அருள்மிகு முத்துக்குழி அம்மன் திருக்கோயில், பேரையூர், மதுரை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர், மதுரை
அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை
அருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில், பரவை, மதுரை
அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை எல்லீஸ் நகர், மதுரை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர், கரூர்
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில், தவிட்டு சந்தை, மதுரை
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர், நாகப்பட்டினம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில், துரையசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், கீழ ஏழாம் வீதி, புதுக்கோட்டை
அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம், ராமநாதபுரம்
அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், பரமக்குடி, ராமநாதபுரம்
அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுஷ்கோடி, ராமநாதபுரம்
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், கண்ணனூர், சேலம்
அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை
அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில், .சிறுவயல், சிவகங்கை
அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி, சிவகங்கை
அருள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில், பையூர் பிள்ளைவயல், சிவகங்கை
அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை
அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோயில், வேலங்குடி, சிவகங்கை
அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை
அருள்மிகு சந்தோஷிமாதா திருக்கோயில், பாதரகுடி-காரைக்குடி, சிவகங்கை
அருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில், பாலதள்ளி, தஞ்சாவூர்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர், தஞ்சாவூர்
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர்
அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கதிராமங்கலம், தஞ்சாவூர்
அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்
அருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில், மரத்துறை, தஞ்சாவூர்
அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர்
அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சத்திரம் கிராமம், புதுக்கோட்டை
அருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி, புதுக்கோட்டை
அருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், ஒக்கூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி, தஞ்சாவூர்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி, தேனி
அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி, தேனி
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர்
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர்
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம், தூத்துக்குடி
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர், திருச்சி
அருள்மிகு கவுமாரி (சப்தமாதர்) திருக்கோயில், மணக்கால், திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி
அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர், திருச்சி
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, திருச்சி
அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில், எஸ்.கண்ணனூர், திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி
அருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில், திருச்சி, திருச்சி
அருள்மிகு பகளாமுகி திருக்கோயில், தெற்கு பாப்பாங்குளம், திருநெல்வேலி
அருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில், பெட்டைக்குளம், திருநெல்வேலி
அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில், வடக்கு வாசல், திருநெல்வேலி
அருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி
அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி
அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர், திருப்பூர்
அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர், திருப்பூர்
அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், வந்தவாசி, திருவண்ணாமலை
அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை
அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல், திருவண்ணாமலை
அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில், திருவாரூர், திருவாரூர்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர், திருவாரூர்
அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், மாந்தோப்பு, விருதுநகர்
அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர்
அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், கவுகாத்தி, கவுகாத்தி
அருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில், டோங்கர்கர், ராஜ்நந்தகான்
அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில், அம்பாஜி, பனஸ்கந்தா, அகமதாபாத்
அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயில், சவுண்டாட்டி, பெல்காம், பெல்காம்
அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி, சிக்மகளூர்
அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கட்டீல், மங்களூரு
அருள்மிகு ஜுவாலாமுகியம்மன் திருக்கோயில், உத்தனஹள்ளி, மைசூரு
அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர், உடுப்பி
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில், பள்ளிப்புரம், ஆலப்புழா
அருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில், சோட்டானிக்கரை, எர்ணாகுளம்
அருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில், பனிசிகாடு, கோட்டயம்
அருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில், குமாரநல்லூர், கோட்டயம்
அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம்
அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், லோகனார்காவு, கோழிக்கோடு
அருள்மிகு பகவதி திருக்கோயில், மணப்புள்ளி, பாலக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், வடக்கன்தரை, பாலக்காடு
அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில், கிழக்குக் கோட்டை, திருவனந்தபுரம்
அருள்மிகு பனமோடு தேவி திருக்கோயில், வள்ளக்கடவு, திருவனந்தபுரம்
அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், ஆற்றுக்கால், திருவனந்தபுரம்
அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில், கொடுங்கலூர், திருச்சூர்
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர், கோலாப்பூர்
அருள்மிகு மும்பாதேவி திருக்கோயில், மும்பை, மும்பை
அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி
அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில், காட்டுமன்னார் கோவில், கடலூர்
அருள்மிகு தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு, கடலூர்
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி, கடலூர்
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில், வானமாதேவி, கடலூர்
அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில், பொலாலி, தட்ஷின கன்னடா
அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை, நீலகிரி
அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர், நீலகிரி
அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம் திருமலைக்கோடி, வேலூர்
அருள்மிகு செல்வலலிதாம்பிகை திருக்கோயில், செல்லப்பிராட்டி, செஞ்சி, விழுப்புரம்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம், தேனி
அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், கம்பம் சாமாண்டிபுரம், தேனி
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர்
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு,
அருள்மிகு கனக துர்கா திருக்கோயில், கனகபுரி, இந்திரகிலபர்வதம், விஜயவாடா
அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி, கன்னியாகுமரி
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில், ஐவர்மலை, திண்டுக்கல்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம், திண்டுக்கல்
அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில், ஈங்கூர்., ஈரோடு
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, ஈரோடு
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர்
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம், சேலம்
அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில், திருவெற்றியூர், சிவகங்கை
அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், கொல்லங்குடி, சிவகங்கை
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர், நாமக்கல்
அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில், பெரியதிருமங்கலம், கரூர்
அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான், மதுரை
அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர், தேனி
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம்
அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர், விழுப்புரம்
அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, விருதுநகர்
அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில், கட்ரா, கட்ரா
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி, புதுச்சேரி
அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை, ஆலப்புழா
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், வடக்கன்பரவூர், எர்ணாகுளம்
அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர், திருவாரூர்
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம், திருப்பூர்
அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம், திருநெல்வேலி
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி
அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி, தேனி
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம், தேனி
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டைBottom of Form


Thursday, 8 January 2015

சித்தர்கள் யார் ..? ? ? ?


        பழங்காலத்தில் பல்வேறு யோகிகளும் சித்தர்களும் இந்து மதத்தை பின்பற்றி மக்களுக்கும் ஆன்மிகத்திற்கும் பல வகையான நன்மைகளைச் செய்தார்கள் .பெரும்பாலான சித்தர்கள் சிவ வழிபாடு செய்பவர்களாகவும், சிவன் வழித்தோன்றவாகவும் ,சிவாலயங்களில் இருக்கும் பகுதிகளில் இருந்து வந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள். திருவண்ணாமலையில் பகவான் ரமணர், யோகி ராம் சுரத்குமார் ,சதுரகிரியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக பெளர்ணமி நாட்களில் வலம் வருவதாக உணரப்படுகிறது. குறிப்பாக சைவத்தை பின்பற்றியவர்களாகவே சித்தர்கள் இருக்கிறார்கள்.
சிற்றின்பத்தை விட பேரின்பமே உயர்ந்ததெனக் கருதி யோக வாழ்வு மேற்கொண்டவர்கள் சித்தர்கள். யாம் கேள்விப்பட்ட வகையில் சித்தர்கள் ஒரு வேளை உணவோ ,தேங்காய்,பழங்களோ அல்லது தண்ணீர் ,சாப்பிட்டு மட்டும் உயிர் வாழ்ந்து வந்ததாகவும் பல படிப்பினைகளில் அறிகின்றோம்.ஆனால் இன்று இந்து மதத்தை தவறாக பயன்படுத்தி சித்தர்கள் உருவில் போலியாக நடித்து பணம் பறித்தும்,தாங்கள் யோகிகள் என்று நம்ப வைத்து பல தவறுகளை ஏற்க முடியவில்லை .சரி இதற்கு என்னதான் தீர்வு. சித்தர்களை எப்படி அடையாளம் காண்பது? இதற்கு பதில் தேடல் தான்.ஆர்வமிருந்தால் தேடுங்கள் கண்டிப்பாக காட்சி தருவார்கள் எப்படி தேடுவது அனுதினமும் சிவ வழிபாடு மேற்கொண்டால் கண்டிப்பாக காணலாம். ஆனால் யாரெல்லாம் சித்தர் யோகியாக இருக்க முடியாது என எனக்கு தெரிந்தவற்றை முன் வைக்கின்றேன் 1. காவி உடையில் நான் பல வித்தைகளை செய்வேன் என்று சொல்பவர் 2. மாடமாளிகை பட்டு மெத்தையில் உறங்குபவர் 3. மூன்று வேளையும் நன்றாக உண்பவர் 4.பெண் சீடர்களை அருகில் வைத்துக்கொள்பவர் 5. ஆசிரம நிதிக்காக வெளிநாடுகளில் பணம் திரட்டுபவர் 6.பாத அபிஷேகம் செய்யச் சொல்பவர் 7.வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர் 8. பல வகையான நவின கார்களில் வலம் வருபவர் என இந்த 8 வகையான ஆட்களுக்கும் சித்தராகும் தகுதி இல்லை.
இறைவன் அருகில் உட்கார்ந்திருப்பதால் மட்டும் சித்தர் ஆகும் ஞானம் கிட்டாது. எனவே சித்தர்கள் யோகிகள் பெயரில் போலிகளை மக்கள் தங்கள் அறியாமையில் இருந்து விலகி இனம் கண்டு கொள்ள வேண்டும் . எல்லோரும் கூட்டமாக ஓர் ஆன்மீக வாதியை தேடிச் செல்கிறார்கள் .அவர்கள் பின்னே நாமும் செல்லாமல் அவரைப்பற்றி உணர்ந்து அறிந்து தெளிந்து ,சாக்கடையா சந்தனமா எனப் புரிந்து ஆசிர்வாதம் பெறுவது நமக்கும் குடும்பத்திற்கும் நல்லது. இன்றும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காடுகளில், மலைகளில்,சூட்சம உருவங்களில் எளிமையாக ஒரு துளி திருநீற்றில் பலர் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். உண்மையான கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு ஆபத்து, உதவிகள் தேவைப்படும்போது அருகே வந்து பல நன்மைகளைச் செய்கிறார்கள்.
மனித வாழ்வில் சாதாரண மனிதனாய் உலக வாழ்வைக்கண்டு மெளனமாய் புன்னகைத்து வலம் வருகிறார்கள். சித்தர்களை நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமெனில் சிவ வழிபாடு அனு தினமும் மேற்கொள்ளுங்கள். முதல் சித்தர் சிவபெருமான் என்பதை உணருங்கள் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள். சித்தர்கள் பற்றியும் சித்தர்கள் வாழ்வு பற்றியும் உங்களுக்கு புலப்படும். ஓம் நமச்சிவாயம்.

இந்த இடுகை சித்தர்கள் பற்றி யோகிகள் பற்றி அலசலே தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை.மக்களை ஆன்மீகம் எனும் போர்வையில் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இடுகையாகும். கருத்துரைகளில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து

Saturday, 15 November 2014

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு !!!


யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங்கிறதுக்காக சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் அது இன்னும் விசேஷம். சனிக் கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.


இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போட வேண்டும்.

எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனிசனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்குகாலணிகள், அன்ன தானம் அளிப்பது , மிக நல்லது.